Friday, March 26, 2010

காம வனம்

எதிர்பாராமல் கிடைத்த முத்தமொன்றை
எனதான வனத்தின் கிழட்டு மரங்களுக்குள்
பதுக்கி வைக்க

தனிமையான வெளியொன்றில்
கவனமாக நிர்ணயிக்கப்படுகிறது
எங்களது புணர்வு .

தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்குள்
திளைத்திடும் நான்
காமத்தின் மெழுகில்
நீல நிற நெற்றிப்பொட்டாய் எரிகிறேன்.

ஏக்கத்தின் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
பிரபஞ்சமாய் மிளிர்ந்திட
வனத்தின் இலைகள்
எதிர்பார்த்து கிடைக்காமல் போன
அவளின் மகரந்த முத்தங்களை
விவாதிக்கின்றன
தீவிரமாக ....

முத்தங்களை மண்புழுவாக்கி
அவளின் மேனியில் நகர்த்துகையில்
ரோமக்கால்கள் தோறும்
மறவாமல் தோன்றுகின்றன
காமத்தின் திரவங்கள் ...

விரல்களில் கசிந்திடும் காமம்
உடலில் அலையென ததும்பிட
மரத்தின் சிலிர்ப்புகளில்
பழுத்த இலைகள் பிரியும் ப்ரியமற்று
உதிர்கின்றன
எண்ணற்ற முத்தங்களை சுமந்து ....

முத்தங்கள் சுமையாகும் பட்சம்
வனத்தின் பாதைகள் தோறும்
நான் ..............அவளாக ;
அவள் ................................................
..............................................................
.........................................சர்ப்பமாக

No comments:

Post a Comment