பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்றான்
மது போதையில் ப்ளாக்
உன் இறந்த கால கண்ணாடியின்
புதை படிவங்களில் சிக்கிய என் ரேகைகளை
மீட்டுத் தர முடியுமா என்றேன்
அவனின் பச்சை இரவுக்குள் .
கணித இரவின் பாறைகள்
தாங்கள் சூடிய ஒப்பனைத் தாவரங்களை
சரிசெய்தவாரே
ஒரு மீயொலியைப் போல
எவ்வித பயமுமற்று
என்னிடம் சொன்னது
பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்று .
ஒப்பனை இரவின் லிபிகளில் கசிந்த குருதியை
ஆடையென உடுத்தி
நியூட்டனின் சுருள் முடிகள்
சர்ப்பமாய் மாறக் கூடும் என்ற
பாறைகளின் விழிப் பயத்தை
நான் களவாடும் தருணம்
அவனின் பரி நிர்வாணம்
என் கண்களைக் கூச வைக்கிறது .
அந்தக் கணிதவியல் அறிஞனின்
உடல் திரட்சியை குறிப்பெடுத்துக் கொண்ட
ஒரு வினோத ஜந்து
பாறை இடுக்குகளின் இரவிற்குள்
மெல்ல நகர்கிறது
எனது சுண்டு விரல் பிடித்து ...
நேற்றைய பொழுதின் பகலை இரண்டாய்க் கிழித்து
ஒன்றில் எனது நிர்வாணத்தையும்
மற்றொன்றில்
இப்பிரபஞ்ச தனிமையினை
முக்கோணமாய் வரைந்து நியூட்டன் இறந்து விட
வரப் போகும் பகலுக்கான
சித்திரக் குறிப்புகளைத் தொலைத்த
விலங்கின் கூர் நகங் கொண்ட
அவனின் பிரதி பிம்பம்
என்னைத் தலை கீழான மதுக் குடுவையெனவும்
இரவின் நிர்வாணத்தை அரை வட்டமாகவும் மாற்றியது
மிகவும் தற்காலிகமானது தான்
இன்றைய இரவின் தனிமையைப் போல ....
Friday, March 26, 2010
காம வனம்
எதிர்பாராமல் கிடைத்த முத்தமொன்றை
எனதான வனத்தின் கிழட்டு மரங்களுக்குள்
பதுக்கி வைக்க
தனிமையான வெளியொன்றில்
கவனமாக நிர்ணயிக்கப்படுகிறது
எங்களது புணர்வு .
தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்குள்
திளைத்திடும் நான்
காமத்தின் மெழுகில்
நீல நிற நெற்றிப்பொட்டாய் எரிகிறேன்.
ஏக்கத்தின் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
பிரபஞ்சமாய் மிளிர்ந்திட
வனத்தின் இலைகள்
எதிர்பார்த்து கிடைக்காமல் போன
அவளின் மகரந்த முத்தங்களை
விவாதிக்கின்றன
தீவிரமாக ....
முத்தங்களை மண்புழுவாக்கி
அவளின் மேனியில் நகர்த்துகையில்
ரோமக்கால்கள் தோறும்
மறவாமல் தோன்றுகின்றன
காமத்தின் திரவங்கள் ...
விரல்களில் கசிந்திடும் காமம்
உடலில் அலையென ததும்பிட
மரத்தின் சிலிர்ப்புகளில்
பழுத்த இலைகள் பிரியும் ப்ரியமற்று
உதிர்கின்றன
எண்ணற்ற முத்தங்களை சுமந்து ....
முத்தங்கள் சுமையாகும் பட்சம்
வனத்தின் பாதைகள் தோறும்
நான் ..............அவளாக ;
அவள் ................................................
..............................................................
.........................................சர்ப்பமாக
எனதான வனத்தின் கிழட்டு மரங்களுக்குள்
பதுக்கி வைக்க
தனிமையான வெளியொன்றில்
கவனமாக நிர்ணயிக்கப்படுகிறது
எங்களது புணர்வு .
தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்குள்
திளைத்திடும் நான்
காமத்தின் மெழுகில்
நீல நிற நெற்றிப்பொட்டாய் எரிகிறேன்.
ஏக்கத்தின் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
பிரபஞ்சமாய் மிளிர்ந்திட
வனத்தின் இலைகள்
எதிர்பார்த்து கிடைக்காமல் போன
அவளின் மகரந்த முத்தங்களை
விவாதிக்கின்றன
தீவிரமாக ....
முத்தங்களை மண்புழுவாக்கி
அவளின் மேனியில் நகர்த்துகையில்
ரோமக்கால்கள் தோறும்
மறவாமல் தோன்றுகின்றன
காமத்தின் திரவங்கள் ...
விரல்களில் கசிந்திடும் காமம்
உடலில் அலையென ததும்பிட
மரத்தின் சிலிர்ப்புகளில்
பழுத்த இலைகள் பிரியும் ப்ரியமற்று
உதிர்கின்றன
எண்ணற்ற முத்தங்களை சுமந்து ....
முத்தங்கள் சுமையாகும் பட்சம்
வனத்தின் பாதைகள் தோறும்
நான் ..............அவளாக ;
அவள் ................................................
..............................................................
.........................................சர்ப்பமாக
Thursday, March 18, 2010
Wednesday, March 17, 2010
கனவுச் சாத்தானின் முத்தச் சிலுவை
அது
என் முதல் கனவாகத்தான் இருந்திருக்கும்
அதில்
நான் உங்கள் அரசின் பிரதிநிதியாகவும்
நீங்கள் அனைவரும் சிலுவைகளைச் சுமக்கும்
என் அடிமைகளாகவும் இருந்தீர்கள்.
உங்களுக்கான
சுதந்திரம் பற்றிய
காமம் பற்றிய
கற்பிதங்களை நானே உருவாக்கினேன்.
உங்களின் அதீத சகிப்புத் தன்மையாலும்
சிலுவைகளின் சுமைகள் பழக்கமாகிவிட்டதாலும்
எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றாலும்
சிறைச்சாலைகளற்ற அக்கனவில்
எனக்கு
அனைத்து விரல்களும் இல்லாமல் தான் இருந்தது.
மற்றொரு கனவில் நான்
என்னை வனமாக மாற்றியிருக்க
அங்கும் நீங்கள் என் சுதந்திர அடிமைகளாகவும்
ஆணிகளை வைத்து விளையாடியவண்ணமுமாய் இருந்தீர்கள்.
கனவிலிருந்து விழித்த உங்களது கண்கள்
எனக்குள் இருக்க
அடக்க முடியா முத்தமொன்றை சிலுவையாக்கி
வியர்வை வழிந்தோடும் என்னுள்
சுமந்து சென்றான் சாத்தான்.
வனப்பட்சிகளின் கலவுதனில் முயங்கிய விருட்சங்கள்
மூன்றாம் ஜாமக் கடுங்குளிருக்கு
தரையில் படர்ந்த கொடிகளை
போர்வையாய் மாற்றிக்கொள்ள
நானும்
அக்கனவின் விரல்களும் இறந்துகிடந்தோம்.
அது என் கடைசிக் கனவாகக் கூட இருக்கலாம்
அங்கு சாத்தானின் காமங் கொண்ட விரல்கள்
பித்தம் தலைக்கேறிய யுவதிகளின்
கூந்தல் சித்திரங்களுக்குள் நுழைய
சிலுவைகளை முத்தங்களால் நிரப்பிய யுவதிகள்
குலை ஒலிகளுக்குள் துயரத்தின் ஆணிகளை
மாலையாக அணிந்து மறைந்தனர்.
சித்திரங்களின் நிழல்களில்
ஆணிகள் ஆழமாய் ஊடுருவிய
விரல்களின் காமத்திற்கு பைத்தியம் பிடிக்க
முத்தங்களால் சாத்தானின் சுமை குறைத்த
நீங்கள் யாவரும் இப்பிரபஞ்சத்தின் தேவனாநீர்கள்
அப்போது நான்
உங்களுக்காக
உங்களின்
சுதந்திரத்தையும் ,காமத்தையும்
உங்களுக்கான
நுகர்பொருளாக்கி வைத்திருந்தேன்
என்
கனவின் கனவிற்குள் .......
என் முதல் கனவாகத்தான் இருந்திருக்கும்
அதில்
நான் உங்கள் அரசின் பிரதிநிதியாகவும்
நீங்கள் அனைவரும் சிலுவைகளைச் சுமக்கும்
என் அடிமைகளாகவும் இருந்தீர்கள்.
உங்களுக்கான
சுதந்திரம் பற்றிய
காமம் பற்றிய
கற்பிதங்களை நானே உருவாக்கினேன்.
உங்களின் அதீத சகிப்புத் தன்மையாலும்
சிலுவைகளின் சுமைகள் பழக்கமாகிவிட்டதாலும்
எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றாலும்
சிறைச்சாலைகளற்ற அக்கனவில்
எனக்கு
அனைத்து விரல்களும் இல்லாமல் தான் இருந்தது.
மற்றொரு கனவில் நான்
என்னை வனமாக மாற்றியிருக்க
அங்கும் நீங்கள் என் சுதந்திர அடிமைகளாகவும்
ஆணிகளை வைத்து விளையாடியவண்ணமுமாய் இருந்தீர்கள்.
கனவிலிருந்து விழித்த உங்களது கண்கள்
எனக்குள் இருக்க
அடக்க முடியா முத்தமொன்றை சிலுவையாக்கி
வியர்வை வழிந்தோடும் என்னுள்
சுமந்து சென்றான் சாத்தான்.
வனப்பட்சிகளின் கலவுதனில் முயங்கிய விருட்சங்கள்
மூன்றாம் ஜாமக் கடுங்குளிருக்கு
தரையில் படர்ந்த கொடிகளை
போர்வையாய் மாற்றிக்கொள்ள
நானும்
அக்கனவின் விரல்களும் இறந்துகிடந்தோம்.
அது என் கடைசிக் கனவாகக் கூட இருக்கலாம்
அங்கு சாத்தானின் காமங் கொண்ட விரல்கள்
பித்தம் தலைக்கேறிய யுவதிகளின்
கூந்தல் சித்திரங்களுக்குள் நுழைய
சிலுவைகளை முத்தங்களால் நிரப்பிய யுவதிகள்
குலை ஒலிகளுக்குள் துயரத்தின் ஆணிகளை
மாலையாக அணிந்து மறைந்தனர்.
சித்திரங்களின் நிழல்களில்
ஆணிகள் ஆழமாய் ஊடுருவிய
விரல்களின் காமத்திற்கு பைத்தியம் பிடிக்க
முத்தங்களால் சாத்தானின் சுமை குறைத்த
நீங்கள் யாவரும் இப்பிரபஞ்சத்தின் தேவனாநீர்கள்
அப்போது நான்
உங்களுக்காக
உங்களின்
சுதந்திரத்தையும் ,காமத்தையும்
உங்களுக்கான
நுகர்பொருளாக்கி வைத்திருந்தேன்
என்
கனவின் கனவிற்குள் .......
Wednesday, March 10, 2010
Monday, March 8, 2010
சுருட்டை முடிக்காரனின் காதுகள்
எல்லோராலும்
ஊளைக் காதன் என்றழைக்கப்பட்ட நான்
வதைக்கும் வெய்யிலில்
யாவருடனும் பேச விருப்பமற்று
நெற்றியில் வழியும் சொற்களை
சுட்டு விரலால் வழித்து
என் காதுகளிலிருந்து நீக்கப்பட்ட
பஞ்சுகளில் தெளிக்கிறேன்.
எனை நோக்கிக் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளும்
புழுவெனத் துடித்து மண்ணில் இறக்கின்றன.
கடவுளரின் எதிர்பாரா கேள்விகளை
எப்படி எதிர்கொள்வதென்பதையும்
சமயங்களில்
என்னுடைய கேள்விகளுக்கே
நான் எப்படி பதில் தருவதென்பதையும்
யோசிக்கையில்
வேறு வழியறியாது
அம்மரத்திற்கு பின்பு தான் ஒளிந்து கொள்கிறேன்.
என் கரு தாங்கிய அவளும்
நானும்
ஏற்கனவே மரணித்த புளிய மர முலைகளில் கசிந்த
ஓர் எழுத்து என்னுள் விழ
எனக்கான அத்தனை கேள்விகளும்
வியர்வையாய் வழிந்தோடுகின்றன
வெக்கையான இப்பகலுக்குள்.
வெயிலின் உக்கிரம் குறைந்த வேளையில்
தன் சுருட்டை முடிச் சிக்கல்களை
கை விரல்களால் எடுத்துக்கொண்டே
நடந்து வரும் காது கேளாக் கடவுளிடம்
எவ்வித பதில்களுமற்ற எனை
ஒரு அட்டைப் பெட்டியில் ஒப்படைக்க
கடவுளும் நானும்
மாறிமாறி சிரித்துக் கொள்கிறோம்.
சிரிப்பிற்குள் எங்கள் இருவருக்கும்
வளரத் தொடங்குகிறது
இலைகளற்ற...
நிழல்களற்ற...
பால் வாசமற்ற ...
நீண்ட காதுகள்.
ஊளைக் காதன் என்றழைக்கப்பட்ட நான்
வதைக்கும் வெய்யிலில்
யாவருடனும் பேச விருப்பமற்று
நெற்றியில் வழியும் சொற்களை
சுட்டு விரலால் வழித்து
என் காதுகளிலிருந்து நீக்கப்பட்ட
பஞ்சுகளில் தெளிக்கிறேன்.
எனை நோக்கிக் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளும்
புழுவெனத் துடித்து மண்ணில் இறக்கின்றன.
கடவுளரின் எதிர்பாரா கேள்விகளை
எப்படி எதிர்கொள்வதென்பதையும்
சமயங்களில்
என்னுடைய கேள்விகளுக்கே
நான் எப்படி பதில் தருவதென்பதையும்
யோசிக்கையில்
வேறு வழியறியாது
அம்மரத்திற்கு பின்பு தான் ஒளிந்து கொள்கிறேன்.
என் கரு தாங்கிய அவளும்
நானும்
ஏற்கனவே மரணித்த புளிய மர முலைகளில் கசிந்த
ஓர் எழுத்து என்னுள் விழ
எனக்கான அத்தனை கேள்விகளும்
வியர்வையாய் வழிந்தோடுகின்றன
வெக்கையான இப்பகலுக்குள்.
வெயிலின் உக்கிரம் குறைந்த வேளையில்
தன் சுருட்டை முடிச் சிக்கல்களை
கை விரல்களால் எடுத்துக்கொண்டே
நடந்து வரும் காது கேளாக் கடவுளிடம்
எவ்வித பதில்களுமற்ற எனை
ஒரு அட்டைப் பெட்டியில் ஒப்படைக்க
கடவுளும் நானும்
மாறிமாறி சிரித்துக் கொள்கிறோம்.
சிரிப்பிற்குள் எங்கள் இருவருக்கும்
வளரத் தொடங்குகிறது
இலைகளற்ற...
நிழல்களற்ற...
பால் வாசமற்ற ...
நீண்ட காதுகள்.
கொலை செய்யப்பட்ட உடலில் கசிந்த அவளின் எழுத்துக்கள்
அசைவுகள் மறந்து
சவமெனக்கிடக்கிறேன்..........
எனைச் சுற்றி
அர்த்தமற்ற உரையாடலை
வெகு கவனமாக நிகழ்த்துகின்றன
என் எண்ணங்களும் ,அவளின் நினைவுகளும்
எரிச்சலான ரீங்காரத்தோடு
உடலின் குருதியை அனுமதியின்றி
உறிஞ்சியவைகளை இறக்கச் செய்கிறது
அறிமுகமற்ற ஓர் எழுத்து.
உடைந்த எலும்புகளை சரி செய்து
கதவு திறந்து
யாருமே அறியாத ஏதோ ஒன்றை அனுமதிக்கிறேன்.
எவ்வித பாவனையும்மற்று
எனைக் கடந்து சென்று
வியர்த்த என் உடலை
களைத்துப் போடுகிறது.
அச்சமயம்
மின் விளக்கை தேடும் பூச்சி ஒன்றை
வேடிக்கை பார்த்த நினைவுகளை
லாவகமாக விழுங்கியது
கொலையை நேரில் பார்த்த பல்லி
மின்சாரமற்ற மின்விசிறியைப் போலவே
அறையும் இருந்திட வாகனத்தின் விரும்பத்தகாத
ஒலி
கலைக்கப்பட்ட என் சவத்தை
எதிர்பாராது மீண்டும் கொலை செய்கிறது.
உரையாடலை முடித்துவிட்ட நினைவுகளைத்
திட்டியவாறே பிளந்த உடலுடன்
வாசல் செல்கிறேன் .
தொலைந்த என் பிரேதங்களை
சாலையில் கிடந்ததாக
கொடுத்துவிட்டுச் செல்கிறாள்
என்னால்
தற்கொலையை நிகழ்த்தியவள்.
சவமெனக்கிடக்கிறேன்..........
எனைச் சுற்றி
அர்த்தமற்ற உரையாடலை
வெகு கவனமாக நிகழ்த்துகின்றன
என் எண்ணங்களும் ,அவளின் நினைவுகளும்
எரிச்சலான ரீங்காரத்தோடு
உடலின் குருதியை அனுமதியின்றி
உறிஞ்சியவைகளை இறக்கச் செய்கிறது
அறிமுகமற்ற ஓர் எழுத்து.
உடைந்த எலும்புகளை சரி செய்து
கதவு திறந்து
யாருமே அறியாத ஏதோ ஒன்றை அனுமதிக்கிறேன்.
எவ்வித பாவனையும்மற்று
எனைக் கடந்து சென்று
வியர்த்த என் உடலை
களைத்துப் போடுகிறது.
அச்சமயம்
மின் விளக்கை தேடும் பூச்சி ஒன்றை
வேடிக்கை பார்த்த நினைவுகளை
லாவகமாக விழுங்கியது
கொலையை நேரில் பார்த்த பல்லி
மின்சாரமற்ற மின்விசிறியைப் போலவே
அறையும் இருந்திட வாகனத்தின் விரும்பத்தகாத
ஒலி
கலைக்கப்பட்ட என் சவத்தை
எதிர்பாராது மீண்டும் கொலை செய்கிறது.
உரையாடலை முடித்துவிட்ட நினைவுகளைத்
திட்டியவாறே பிளந்த உடலுடன்
வாசல் செல்கிறேன் .
தொலைந்த என் பிரேதங்களை
சாலையில் கிடந்ததாக
கொடுத்துவிட்டுச் செல்கிறாள்
என்னால்
தற்கொலையை நிகழ்த்தியவள்.
Subscribe to:
Posts (Atom)








