Friday, April 2, 2010

வடிவத்திற்குள் மறைபவர்கள்

அங்கங்களை நட்சத்திரமாக்கி
உறைந்து கிடக்கும் எனதருகில்
குருதி மிதக்கிறது
புனித யோனியாய்...

சுழியின் விளிம்புகளில்
சயனம் கலைந்த கனசதுரமாய்
யார் யாரோ தூக்கி ஓடுகின்றனர்
எனை .....
நானும் ஓடுகின்றேன்
அவர்களுடன்...

கனசதுரம் கனசெவ்வகமாய் மாற
யார் யாரோ துரத்துகிறார்கள்
எனை ...
நானும் துரத்துகிறேன்
அவர்களுடன் ...


மரண பயம் கருதி
கவனமாக ஒளிகிறேன்
எனக்குள்.
எனக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும்
எனைப்போலோருவனை
என்னிருத்தல் காரணமாய்
யாரோ ஒருவனால் எனக்கு சுடவிருந்த
பெயரின் முதல் எழுத்தில்
சில சொற்கள் எடுத்து
அவனின் மார்பினில் அழுத்துகிறேன்
கேவலின் ரணமொழுக துடித்திடும் என்னில்
உயிரை கையில் பிடித்து
குருதி சிந்த விழுகிறான்
கோள வடிவ சூத்திரத்திற்க்குள்....


காமம் -இயலாமை -துயரம்
ஆகியவற்றின் நீண்ட விவாதங்களிடையே
அழுக்கடைந்த யோனிக்குள்
கருவறைக் குழந்தையாய்
மிதந்து கொண்டிருக்கிறேன் நட்சத்திரமாக ...


பசிக்கு
சில
குருதிக் கவளங்களுடன்.......

No comments:

Post a Comment